Showing posts with label குர்ஆன். Show all posts
Showing posts with label குர்ஆன். Show all posts

Wednesday, September 17, 2008

கத்தரில் உருவாகும் உலகின் முதல் குர்ஆன் தோட்டம்!

உலகத்தின் முதல் குர் ஆனிய தோட்டம் (Qur'anic Botanical Garden) வளைகுடா நாடுகளில் ஒன்றான (தோஹா) கத்தரில் உருவாகிறது.

எதிர்காலத்தினை நிர்ணயிக்கும் சக்திகளான மாணவர் சமுதாயத்தினை மேம்படுத்தும் வகையில் கத்தரில் எஜுகேஷன் ஸிட்டியில் இத்தோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.இந்நகரத்தில் இந்த இஸ்லாமியத் தோட்டம் அமைவதன் மூலம் உலகக் கல்வி மையங்களுக்கும், ஆராய்ச்சி நிபுணத்துவ மையங்களுக்கும் இது ஒரு மைல் கல்லாக அமையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இதற்கான அதிகாரப்பூர்வமான அடிக்கல் நாட்டு விழா சென்ற வாரம் நடைபெற்றது. இதனை கத்தர் நாட்டு அரசரின் மனைவியான ஷேக்கா மோஜா நாஸர் அல் மிஸ்னாத் துவங்கி வைத்துள்ளார்.

150 க்கும் மேற்பட்ட திருக்குர்ஆன் வசனங்களில் இடம் பெற்றுள்ள மற்றும் ஏராளமான ஹதீஸ் நூல்களில் இடம் பெற்றுள்ள அனைத்து வகையான தாவரங்களும் இந்தத் தோட்டத்தில் இடம் பெறும். குறிப்பாக சுவர்க்கத் தோட்டம் (ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ்) என்று வர்ணிக்கப்படும் தாவர வகைகள் அனைத்தும் இத் தோட்டத்தில் முதன்மையாக இடம்பெறும்.

உலகில் ஆங்காங்கே அமைக்கப் படும் சாதாரண Botanical Garden போன்றல்லாமல் இந்தக் குர் ஆனிய தோட்டம் முற்றிலும் மாறுபட்ட வகையில் அமைக்கப் படுகிறது.

கல்வி, மார்க்க நன்னெறி, அறிவியல் ஆராய்ச்சி, தாவரவியலில் பதப்படுத்துதல் மற்றும் பேணிப் பாதுகாத்தல் மற்றும் பல்வேறு நுண்ணாராய்ச்சி விரிவாக்கத்தினை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்படுகிறது" என்கிறார் கத்தர் ஃபவுண்டேஷன் நிறுவனத்தின் துணைத் தலைவரான டாக்டர் சைஃப் அல் ஹாஜாரி அவர்கள்.

குர் ஆனில் கூறப்பட்டுள்ள தாவரவியலில் சாராம்சத்தினை அடிப்படையாகக் கொண்டு அவற்றில் பயன்கள், மருத்துவ முக்கியத்துவம் மற்றும் நவீன அறிவியல் துறையில் இவற்றிற்கான பங்கு ஆகியவற்றினை பகுப்பாய்வு செய்யும் முறைகளில் இந்த தோட்டம் அமையும்.

யுனெஸ்க்கோ அமைப்பு (United Nations Educational, Scientific and Cultural Organisation's) சில வருடங்களுக்கு முன்பு சுற்றுப் புறச் சூழல் பாதுகாப்பு, அறிவியல் ஆராய்ச்சி, கல்வி மற்றும் பொழுதுபோக்கு ஆகிய அம்சங்கள் உள்ளடங்கிய தோட்டம் ஒன்றினை அமைக்கத் யோசனை தெரிவித்தபோது, ஏற்கனவே இவ்வம்சங்கள் அனைத்தும் ஒருங்கே அமைந்த இஸ்லாமியத் தோட்டம் அமைக்கும் திட்டம் உருவெடுத்தது.

குர் ஆனிய தோட்டம் மூன்று பகுதிகளாக அமைக்கப் பட உள்ளது. அதன் முதல் படியாக 24 ஹெக்டேர் நிலப்பரப்பில் திருக்குர்ஆனில் குறிப்பிடப் பட்டுள்ள 51 வகையான தாவரங்கள் இதில் பயிரிடப்படும். இவை முறையே கடுகு முதல் குங்குமப்பூ வரையிலும், பரங்கிக் காய் முதல் கற்றாழை வரையிலும், மருதாணி முதல் மாதுளம் பழம் வரை இறைமறை மற்றும் நபிமொழிகளில் இடம் பெறும் அத்துணை வகைகளும் இதில் இடம் பெறும். இது தவிர 350 க்கும் மேற்பட்ட மலர்களின் வகைகளும் இதில் இடம் பெறும்.

விரைவில் இந்தத் தோட்டம் மற்றும் அதில் இடம் பெறும் தாவர வகைகள் ஆகியவை பற்றிய புத்தங்கள், பிரசுரங்கள் மற்றும் இணைய தளம் ஆகியவை மக்களிடையே அறிமுகப் படுத்தப் படும். இதன் மூலம் பண்டைய கால மக்கள் பயன்படுத்தி வந்த மரபு சார் தாவர வகைகளின் பயன்பாட்டிற்கும் இக்கால நவீன அறிவியலுக்கும் ஒரு இணைப்புப் பாலம் ஏற்படுத்தப்படும். இது ஆராய்ச்சியாளர்களுக்கும், மாணவர்களுக்கும் பெரும் உதவிகரமாக இருக்கும்

இந்த குர் ஆனிய தோட்டம் மூலம் இஸ்லாம் எவ்வாறு உலக அறிவியல் நிபுணத்துவம் மற்றும் மருத்துவத்துறை முன்னேற்றத்தில் பெரும் பங்கு ஆற்றியது என்ற முழு விபரமும் சர்வதேச அளவில் மக்களுக்குச் சென்றடையும். இது நாள் வரை பிற மதத்தினர் இஸ்லாம் மீது கொண்டுள்ள தவறான பல தகவல்களை இந்தக் குர் ஆனிய தோட்டம் முழுமையாக மாற்றியமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் டாக்டர் அல் ஹாஜாரி. கத்தார் நாட்டினைத் தொடர்ந்து இவ்வகைத் தோட்டம் அடுத்தடுத்த அரபு நாடுகளில் அமைக்கப்பட உள்ளது.

உலகின் முதன் முதலில் அமையும் இந்த குர் ஆனியத் தோட்டத்தினை முழு உலகிற்கும் பறைசாற்றும் வகையில் இது சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக சேர்க்கப் படவும் உள்ளது என்பது கூடுதல் செய்தி.

Tuesday, December 11, 2007

குர்ஆன் மென்பொருள்!

குர்ஆன் மென்பொருட்கள் பல கிடைத்தாலும் தொழில்நுட்பக் குறைகள் மிகைத்தே காணப்படுகின்றன. இச்சூழலில் முழுக்க முழுக்க யூனிகோடுத் தமிழ், அரபி, மற்றும் ஆங்கிலத்தில் இணைந்த அருமையான அதுவும் முற்றிலும் இலவச பதிப்பாக ஆன்லைனில் இருந்து டவுன்லோட் செய்து கணணியில் நிறுவிக்கொள்ளும் வசதி கொண்ட இம்மென்பொருள் எனக்கு திருப்தியாக உள்ளது. நீங்களும் இதனை முயற்சித்துப் பாருங்கள்.


செய்முறை - 1 (சுட்டியை கிளிக்கி நிறுவிக்கொள்க)

QRFull4beta1.exe (13.2 MB)


செய்முறை - 2 (கீழுள்ள வசனங்களுக்கான சுட்டிகளை கிளிக்கி தானியங்கி முறையில் நிறுவிக்கொள்க)

QR-MP3-89to114.exe

QR-MP3-78to88.exe

QR-MP3-50to77.exe
QR-MP3-30to49.exe

QR-MP3-15to29.exe
QR-MP3-05to14.exe
QR-MP3-02to04.exe


செய்முறை - 3 (கீழுள்ள விருப்பமொழி சுட்டிகளை கிளிக்கி தானியங்கி முறையில் நிறுவிக்கொள்க)

QR Tamil.exe
QR Malayalam.exe
QR Urdu.exe



சிறப்பம்சங்கள்

- ஸாஅத் அல் ஹம்தி அவர்களின் அழகிய குரலில்
- தமிழ், அரபி, ஆங்கிலம் மற்றும் விரும்பிய 24 மொழிகளில்...
- தேர்ந்தெடுத்த வசனங்களையோ முழுக்குர் ஆனையோ அரபி ஒலியுடன் கூடிய தமிழ் எழுத்தில் பயனடையும் வசதி
- வார்த்தைக்கு வார்த்தை அர்த்தங்களைக் காட்டும் வசதி
- தமிழ் அர்த்தத்துடன் குர் ஆனை மனப்பாடம் செய்து கொள்ள அருமையான வசதி (Ctrl+R)
- முதல் இலவச பதிவிறக்க குர் ஆன் மென்பொருள்



நிறுவி துவங்கியபின் வரும் முதல் சாளரம் கீழ்க்கண்டவாறு கிடைக்கும்: இதில் உள்ள கீழ்நோக்கிய அம்பு (down arrow) குறியைப் படத்தில் காட்டியுள்ளவாறு கிளிக்கினால்...



























கீழே உள்ளவாறு யூனிகோடுத் தமிழில் அரபி ஒலியுடன் குர் ஆனைக் கேட்டு பார்த்து மகிழலாம். புதிய அனுபவத்திற்கு வாழ்த்துக்கள்!

(செயலியை இலவசமாக அளிக்கும் www.Shaplus.com தளத்தினருக்கு நன்றிகள்)




















பயன் தரக்கூடியதாகத் இருப்பின் இருவரிகளில் பகிர்ந்து கொள்ளுங்கள். தவிர சந்தேகங்கள் ஏதுமிருப்பின் எழுதுங்கள்.